திருநெல்வேலி : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வல்லவன்கோட்டை, மேலத் தெருவை சேர்ந்த அபினேஷ் (23). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் கவனத்திற்கு வந்ததால், அவரை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப.,வின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுபடி, அபினேஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (05.04.2025) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்