திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கம்மாளங்குளம், இராமையன்பட்டியை சேர்ந்த முருகன் மகன் சுடலைகண்ணு என்ற சுடலைமணி (29). கொலை முயற்சி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் உள்ளார். இவர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக
மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் கவனத்திற்கு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், சுடலை மணியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (22.05.2025) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்