திருநெல்வேலி : திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட காா்மேகனார் தெருவை சோ்ந்த ரத்தினபாண்டி மகன் மாணிக்கம் என்ற மகேஷ் (30). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு சங்கன்திரடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் பார்வதி பாஸ்கரன் (22). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாணிக்கம் என்ற மகேஷ், பார்வதி பாஸ்கரன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (27.04.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்