திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கில் மங்களாகுடியிருப்பைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சண்முககொம்பையா(21). கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், வி.கீதா, (மேற்கு) பரிந்துரைத்தார். அதன் பேரில், மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., பிறப்பித்த உத்தரவுப்படி, சண்முக கொம்பையாவை தச்சநல்லூர் காவல் ஆய்வாளர், முத்து கணேஷ், கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் (08.04.2025) அன்று அடைத்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்