திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட உவரி, பீச் காலனியை சேர்ந்த சசிகுமார் மகன் கெளதம் (23). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக உவரி காவல் ஆய்வாளர், சிவகளை கவனத்திற்கு வந்ததால், குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி கௌதம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (14.05.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்