திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தைச் சேர்ந்த அன்புராஜ் மகன் அருண்குமார் என்ற சுள்ளான் (38). என்பவர் குற்ற வழக்குகளில்
சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், V.கீதா, (மேற்கு) சந்திப்பு சரக காவல் உதவி ஆணையர் (பொறுப்பு) மு.ஆவுடையப்பன் , இருப்புப்பாதை காவல் ஆய்வாளர், பிரியா மோகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப,வின் ஆணைப்படி (11.02.2025)-அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்