திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை, நடுவக்குறிச்சி, சர்க்கரை விநாயகர் கோவில் நெருவைச் சேர்ந்த இசக்கி என்ற இசக்கிபாண்டி (39). திம்மராஜபுரம் மேலூர், பசும்பொன் நகரைச் சேர்ந்த மகாராஜன்(38). ஆகிய இருவரும் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், V.கீதா, (மேற்கு) பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. ஆணைப்படி (14.05.2025) அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்