திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக, பத்மநாபமங்கலத்தை சேர்ந்த கருப்பசாமி (21). கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து அடிதடி, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, சிவந்திபட்டி காவல் ஆய்வாளர், சுதா விடுத்த வேண்டுகோளின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கருப்பசாமி (01.07.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்