திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இராமையன்பட்டி, ஹரிஜன தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் இசக்கி பாண்டி (23). கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் கவனத்திற்கு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டம் பிரிவு 14 யின் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப.,வின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இசக்கி பாண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (25.01.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்