திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டுதல், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளில் ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த வலதி (26). கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாகக் கூறி அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், ச.விஜயகுமார், சந்திப்பு காவல் உதவி ஆணையர், என். தர்ஷிகா ஆகியோர் பரிந்துரைத்தனர். அதன்பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., பிறப்பித்த உத்தரவுப்படி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வலதி, பாளையங்கோட்டை மத்திய சிறையில்( 26.04.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்