திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட அக்ரஹார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வலதி என்ற ஆறுமுகம் (23). கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை இவர் அச்சுறுத்தி வருவதாக கங்கைகொண்டான் வட்ட காவல் ஆய்வாளர், வேல்கனி கவனத்திற்கு வந்ததால், குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.க.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், வலதி என்று ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (30.04.2025) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்