திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி கோட்டை தெருவை சேர்ந்த திருப்பதி மகன் மாசானமுத்து (21). கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிதடி, கொலை முயற்சி மற்றும் மோசடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கங்கைகொண்டான் வட்ட காவல் ஆய்வாளர், வேல்கனி கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், மாசான முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (20.01.2025) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்