கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரிTo திருவண்ணாமலை NH ரோடு தொகரப் பள்ளி காப்பு காட்டின் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 3,53,400/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள், ₹ 2,000/-ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபானம் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் மற்றும் மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து குட்கா பொருட்கள் மற்றும் மதுபானத்தை வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்