கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ஊத்தங்கரை To கல்லாவி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹56,700/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்