கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கூச்சூர் EB ஆபிஸ் குட்டூர் ஜங்ஷன் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கிரானைட் கல் இருந்தது, அனுமதியின்றி கிரானைட் கல் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து மத்தூர் காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.