தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (15.07.2025) புளியம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.