திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் கணித அடிப்படை பயிற்சியான அபாகஸ் பயிற்சி ஆசிரியை யாஸ்மின் (Sharp Abacus Learning School) தலைமையில் 15 நாட்கள் நடத்தப்பட்டது. இப்பயிற்சியின் இறுதி நாளான (01.06.2025) அன்று 61 மாணவ மாணவியருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கி மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்