தூத்துக்குடி: (21.05.2025) தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.