தென்காசி : தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமையும், குளிர்ந்த காற்றையும், பல அருவிகளையும் கொண்ட சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வரும் நிலையில், பசுமைத் தமிழகம் – Green Tamilnadu Mission திட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி (21.09.2025) அன்று நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற காவல் துறையினர் பலர் கலந்து கொண்டு தங்களுடைய மன நிறைவையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அரவிந்த், சைபர் கிரைம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழினியன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்