தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் இன்று (06.01.2026) மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 31 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 135 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, வாகன ஓட்டுநர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து சீர் செய்யுமாறும், சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தையும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தையும் இயக்குமாறு உத்தரவிட்டும், வாகனங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
















