அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் அவர்களின் உத்தரவின் படி, (27.06.2025) அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கீழப்பழூர் காவல் ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் தலைமையில், நடைபெற்ற பேரணியில் விநாயகா கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதே போன்று, திருமானூரில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி சென்றனர். மேலும் செந்துறை, தா.பழூர், வெங்கனூர் போன்ற காவல் நிலையங்கள் சார்பாக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.