திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் (07.06.2025) அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருந்த தாக்குதல் சம்பவங்களை முன்கூட்டியே தகவல்களை சேகரித்து நடவடிக்கை மேற்கொண்டு அதனைத் தடுத்து. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் G.R. ஸ்டீபன் ஜோஸ், சசிகுமார். கலா மற்றும் உதவி ஆய்வாளர்கள், சுதன் திரு செல்வராஜ், கார்த்திக், உட்பட 17 பேரை பாராட்டி காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) பண வெகுமதி அறிவித்தார். அந்த வெகுமதியை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப சம்மந்தப்பட்ட காவல் அலுவலர்களை நேரில் அழைத்து அவர்கள் செய்த நற்பணிகளை பாராட்டி வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்