தூத்துக்குடி: ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (13.09.2025) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். பின்னர் ஆயுதப்படை போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.