திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் நடக்கவிருந்த மூன்று கொலை முயற்சிகளை தடுத்து துணிச்சலான காவல் நடவடிக்கையை மேற்கொண்ட 13 காவல்துறையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப., அவர்கள் சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.