திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிலாப்பாடி ஆயுத படை மைதானத்தில் ஆயுத படை காவலர்களின் வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி நிறைவு பெருவிழாவில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர்.வந்திதா பாண்டே. இ.கா.ப.மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப., முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தார்கள் கலந்து கொண்டார். இறுதியில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா