திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் குடிபோதையில் ஒருவர் மாற்றுத்திறனாளியை கட்டையாலும், கையாளும் தாக்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர் மாற்றுத்திறனாளியை தாக்கிய போதை ஆசாமி தடுத்தபோது போதை ஆசாமி காவலரை தாக்கி உடையை கிழிக்க முற்பட்டு தள்ளிவிட்டார். பின்பு துரிதமாக செயல்பட்ட காவலர், மாற்றுத்திறனாளியையும், தன்னையையும் தாக்கிய குடி போதை ஆசாமியை பிடித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவலர்கள் விசாரணை மேற்கொண்ட போது குடி போதை ஆசாமியின் பெயர் ஆனந்த் என்றும் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரிய வந்தது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா