திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் அத்தியூட்டு தெருவைச் சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லா (27). இவர் மணிமுத்தாறு 9-ஆவது பட்டாலியனில் காவலராக பணிபுரிகிறார். விடுமுறைக்கு வந்த இவர் (22.06.2025) அன்று மாலை பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மாநகராட்சி பூங்காவுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அப்போது அங்கு தகராறு செய்து கொண்டிருந்த இளைஞர்களை அவர் தட்டிக் கேட்ட போது ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரஹ்மத்துல்லாவை வெட்டியதால் அவரது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்