திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி பகுதியில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து சாலையில் உருண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யோகேஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா