திருநெல்வேலி: திருநெல்வேலியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாவட்ட காவல்துறையினர், மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் வகையில், அரசால் வழங்கப்படும் பரிசுத் தொகையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., (27.10.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கி, அவர்களது குறிக்கோள்கள் வெற்றியடைவும், மேற்படிப்பில் நன்கு படித்து உயர்ந்த நிலையை அடைந்து வெற்றி பெறவும், சிறந்த துறையை தேர்ந்தெடுத்து அதில் மென்மேலும் பல சாதனைகள் புரியவும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்