திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக திருமதி. சண்முக லட்சுமி பணிபுரிந்து வருகிறார். அம்மையநாயக்கனூர் அருகே உள்ள முதியோர் கருணை இல்லம் உள்ளது. தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி நேரில் சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார். மேலும் அங்கிருந்த அனைவருக்கும் உணவளித்து அவர்கள் அனைவரிடமும் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து வாழ்ந்த வரும் முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய ஆய்வாளர் சண்முக லட்சுமியை அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது – மதுரை