தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (19.07.2025) தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் கமாண்டோ பயிற்சியை பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு வரும் காவலர்களிடம், அசாதாரண சூழ்நிலைகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையின் போதும் கமாண்டோ பிரிவு முக்கியத்துவம் வகிக்கும் என்றும், கமாண்டோ பயிற்சியை சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.