திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள அவனாப்பேரியை சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (36). பானுப்பிரியா, தம்பதியினர். (32) இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை வயலில் வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 போ் கொண்ட கும்பல், இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் காயமடைந்த தம்பதியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்