திருநெல்வேலி : திருநெல்வேலி கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(42), முத்துலட்சுமி (35). தம்பதியினர். இருவருக்கும் இடையே இருந்த குடும்பப் பிரச்சனை காரணமாக (30.05.2025) அன்று முத்து லட்சுமி, பாலசுப்ரமணியன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது சூடாகக் காய்ச்சிய எண்ணையை மேலே ஊற்றி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாலசுப்ரமணியன் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர், சுதா வழக்கு பதிந்து முத்துலட்சுமியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத