திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கன்னிவாடி வனத்துறை வனவர் வெற்றிவேல் தலைமையிலான வனத்துறையினர் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி பகுதியில் ரோந்து சென்றபோது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக சாக்கு முட்டையுடன் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர்கள் சின்னாளபட்டியை சேர்ந்த கோபிநாத், கலிக்கம்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி, வெள்ளோடு பகுதியை சேர்ந்த மாணிக்கம், அமலிநகர் பகுதியை சேர்ந்த அந்தோணி என்பதும், கடமான் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கடமான்இறைச்சி, மான்தோல், ரெட்டைகுழல் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா