தூத்துக்குடி: கடந்த (15.11.2025) அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் அரிகிருஷ்ணன் (54). மற்றும் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் ரவிகுமார்(53). ஆகிய 2 குற்றவாளிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் இன்று (14.12.2025) சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 140 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















