திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர், சரவணபால் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த ராஜா என்ற கிருஷ்ணராஜாவை (23). சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய 60 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து தேவர்குளம் காவல் உதவி ஆய்வாளர், கணேஷ் குமார், வழக்கு பதிவு செய்து ராஜா என்ற கிருஷ்ணராஜாவை (02.02.2025) அன்று கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்