திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர், பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அக்னல் விஜய் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வெள்ளாங்குளி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த ஏழுமலை (19). என்ற இளைஞரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஏழுமலையை (17.02.2025) அன்று கைது செய்து அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்