திண்டுக்கல்: திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை மற்றும் ஆடுகள் திருடு போனது தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து வேடசந்தூர் டிஎஸ்பி S.பவித்ரா உத்தரவின் பேரில் வேடசந்தூர் உட்கோட்டை காவல் தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் முனைவர் T.கண்ணன், SI T. பாண்டியன், SI A. வேலுமணி, SSI மாதவன், SSI ரமேஷ் பாபு, HC அன்பு முருகன், HC ரவீந்திரன் ஆகிய போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கஞ்சா விற்பனை மற்றும் ஆடு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வடுகபட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார் (24). ஸ்ரீகாந்த் (24). தோப்புப்பட்டியை சேர்ந்த சபரி கார்த்திக் (21). வடமதுரை தெற்கு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரவண பிரபு (26). அய்யலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்த குரு பிரசாந்த் (19). அய்யலூர் கிணத்துப்பட்டியை சேர்ந்த சண்முகம் (20). ஆகிய 6 பேரை கைது செய்ததை, SP Dr.A. பிரதீப்,IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா