திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் , எட்வின் அருள்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, தருவை பனங்காடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மேல இலந்தைகுளத்தை சேர்ந்த செல்லதுரை (19). என்பவரை சோதனை செய்ததில் அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து செல்லத்துரையை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்