திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியில் உதவி ஆய்வாளர், ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது நடுக்கல்லூர், ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த கீழகல்லூர், எம்.ஜி.ஆர் நகர் காலனியை சேர்ந்த அபினேஷ்(23). என்பவரை சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த அபினேஷை காவல் உதவி ஆய்வாளர், ராமநாதன் வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்