திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில், வள்ளியூர் முத்தாரம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த வள்ளியூரை சேர்ந்த ராஜா (41). என்பவரை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட வள்ளியூர் காவல் ஆய்வாளர், நவீன் ராஜாவை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்