திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினரின் ரோந்துப் பணியின் போது அப்புவிளை அருகே சந்தேகத்தின் பேரில் திசையன்விளை, உடன்குடி ரோடு பகுதியை சேர்ந்த லோகேஷ் (19). என்ற இளைஞரை சோதனை செய்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திசையன்விளை காவல் ஆய்வாளர், சிவகளை வழக்கு பதிவு செய்து லோகேஷை (13.04.2025) அன்று கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்