இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகே சின்னஉடப்பங்குளம் சுடுகாடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்துகுமார் என்ற நபரை மண்டலமாணிக்கம் சார்பு ஆய்வாளர் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும், அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.