தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் மாசார்பட்டி காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான மாசார்பட்டி தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த முகமது மீராசா மகன் ஷாஜகான் (42). என்பவரை மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் (05.09.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.