கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது முதுகுறுக்கி கிராமத்தில் உள்ள பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு வாகனங்களை சோதனை செய்தபோது கஞ்சா, வெளிமாநில மதுபானம் இருந்தது. கஞ்சா, மதுபானம் வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1கிலோ 100 கிராம் கஞ்சா, வெளிமாநில மதுபானம் இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து மூன்று குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்