திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.06.2023),-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முப்பிடாரி, சாமிநாதபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஆறுமுகம், நில அபகரிப்பு மீட்பு மற்றும் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.ஜலால் முகமது, பழனி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பசாமி, கொடைக்கானல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பன்னீர் செல்வம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.முத்துசாமி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பழனிச்சாமி, ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சின்னத்தம்பி ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா