திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற செவிலியர் ஜெயமரிய பாக்கியம் (82). இவர் தனியாக வசித்து வந்த நிலையில், ஜாமியா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் குமார் (17). என்பவர் உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர், சண்முகவேல் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜெயமரிய பாக்கியத்திற்கு உதவியாக இருந்த குமார் நகைகளைத் திருடியது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்து ரூ. 6.70 லட்சம் மதிப்புள்ள 17 பவுன் நகைகளை மீட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்