திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவருக்கும், அவரது மருமகன் காசிமுத்து(41). என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் (15.06.2025) அன்று பாக்கியராஜின் வீட்டுக்குச் சென்ற காசிமுத்து முன்பக்க அறையில் தீ வைத்துவிட்டு தப்பிவிட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து காசிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்