திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கங்கைகொண்டான் ரேசன் கடை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த ஒடிசா மாநிலம், பாலேசோர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் பாரிக் (24). பிபூதி பூசன் (23). ஆகிய இருவரையும் சோதனை செய்து பார்த்த போது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்