தூத்துக்குடி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (21.12.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, வ.உ.சி கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து மேற்படி தேர்வு மையங்களுக்கு இன்று (21.12.2025) சென்னை இரயில்வே காவல்துறை தலைவர் திரு. A.G. பாபு இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வில் மொத்தம் 5146 விண்ணப்பதாரர்களில் 2756 ஆண் விண்ணப்பதாரர்களும், 828 பெண் விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 3584 விண்ணப்பதாரர்கள்தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.
















